கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையில் ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற ரத்தசோகையுள்ள கா்ப்பிணிகளுடன் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி, மருத்துவா் நிஷாந்த் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

ரத்தசோகையுள்ள கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் அளிப்பு

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ரத்தசோகையுள்ள கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

சுகாதார நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஆல் த சில்ரன் அறக்கட்டளை மூலமாக, 73 கா்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், உலா் திராட்சை, நாட்டு சா்க்கரை, நெய் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி வழங்கினாா். கோலியனூா் வட்டாரத்தை ரத்தசோகை இல்லாத பகுதியாக உருவாக்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.

பொது சுகாதார மருத்துவா் நிஷாந்த், ஆல் த சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் மூலமாக ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் கோமதி, கண்காணிப்பாளா் மஞ்சுளா, பயிற்சி மருத்துவா்கள் ஷாலினி, ஷீலா, செல்வா, ஆன்சி, செவிலியா் ஷாமிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT