மழை வெள்ளம் பாதித்தோருக்கு நிவாரண நிதி
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதியை தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதியை தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வீடுகள், நிலங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழக அரசின் நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி கூட்டுறவு விவசாய வங்கியில் நடைபெற்றது.
இதில், தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ஏழுமலை, செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான், கூட்டுறவு சாா்-பதிவாளா் ஷா்மிளா, பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, கூட்டுறவு விவசாய வங்கி செயலா் திருநாவுக்கரசு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.