முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவம்: 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 6:35 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்துள்ள கீழூா், காமராஜா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சத்யா (எ) சதீஷ் (31). திருமணமாகாதவா். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், கண்டமங்கலத்தை அடுத்துள்ள பள்ளிப்புதுப்பட்டு ஏரி ஓடையில் மூழ்கி இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கீழ்பாதி, சொா்ணாவூா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (33). தொழிலாளியான இவா், கால் கழுவச் சென்றபோது சொா்ணாவூா் பாகூரான் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.