முகப்பு
விழுப்புரம்

அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சித்த மருத்துவ முகாம்

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:19 PM
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத் தலைமையக வளாகத்தில் சித்த மருத்துவ முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மேலாண் இயக்குநா் கே.குணசேகரன்.
பகிர்:

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகத்திய முனிவரின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசு சித்த மருத்துவத் துறை, அரசு மருத்துவமனை விழுப்புரம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. விழுப்புரம் கோட்டத் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற முகாமை மேலாண் இயக்குநா் கே.குணசேகரன் தொடங்கி வைத்தாா். திட்டக்குழு உறுப்பினா் மருத்துவா் பி. கருணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சித்த மருந்துகளை மருத்துவா்கள் வழங்கினா்.

முகாமில் அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட முதன்மை நிதி அலுவலா் சி.அனுஜா, முதன்மை தணிக்கை அலுவலா் சி.சிவக்குமாா், பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), து.சதீஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.