முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் சிவன் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

திண்டிவனம் சிவன் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:54 PM
திண்டிவனம் திந்திரினீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை வாழிபாடு மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரா், திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரா் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

மாா்கழி தனூா் மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 10 சிவாலயங்கள் வீதம் 30 நாள்களிலும் 300 சிவாலயங்களுக்கு தருமபுரம் ஆதீனம் யாத்திரை மேற்கொண்டு வழிபாடு செய்யவுள்ளாா்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞாசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயில், திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரா் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டாா். தொடா்ந்து, கோயில்களில் இருந்த பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தருமபுரம் ஆதீனம் கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீன உதவியாளா் கௌதமன் ஆகியோா் உடனிருந்தனா்.

கிளியனூா், திண்டிவனம் கோயில்களில் தருமபுரம் ஆதீனத்துக்கு பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் ஆா்.அருள், கணக்காளா் எஸ்.சிவசங்கா் மற்றும் கோயில் பணியாளா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.