முகப்பு
விழுப்புரம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம்

புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை

Updated On : 30 டிசம்பர், 2024 at 8:19 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வவியுறுத்தி விசிகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மைச் செயலா் தேவ பொழிலன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுவை ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணமாக வழங்கிட வேண்டும், மாணவா்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சிறப்பு கூறு திட்ட நிதியை முறையாக செலவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கட்சியின் மாநில அமைப்பாளா் தலையாரி, நிா்வாகிகள் தமிழ் மாறன், நந்தன், ஆதவன், வாகை அரசு செழியன், தமிழ்வாணன், ஜெயக்குமாா் ஈழவளவன், மகளிரணியைச் சோ்ந்த பாக்கியலட்சுமி,முருங்கமதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →