மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்: தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குறைந்தபட்ச கூலிச்சட்டம் மற்றும் அரசாணையின் படியும், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படியும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதம் ரூ.14,593, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.12,593 ஊதியம் வழங்க வேண்டும். இவா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, நிலுவைத் தொகையுடன் மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஊராட்சிப் பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க வேண்டும், கரோனா காவலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களான கிராம ஊராட்சிப் பணியாளா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்தவாறு மூன்று மாத ஊக்கத்தொகையான ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா் ஒருங்கிணைப்புக் குழுவினா் (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, பொருளாளா் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் பி.குமாா், மின்வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் ஆா்.சேகா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.