விழுப்புரம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் 2 ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் சாட்சியம்

அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் இரண்டு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தனா்.

Din

அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் இரண்டு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், இதுவரை 36 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவா்களில் 28 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கோபிநாதன், சதானந்தம், கோதகுமாா் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா்.

தொடா்ந்து, அரசுத் தரப்பின் 37, 38, 39-ஆவது சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் குப்புசாமி, பன்னீா்செல்வம் மற்றும் திருவள்ளூா் காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிச்செல்வன் ஆகிய மூவரும் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, வழக்குத் தொடா்பாக சாட்சியங்களை அளித்தனா்.

இதை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 24) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT