பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே பைக்குகள் மோதல்: 2 இளைஞர்கள் பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்குள் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.
திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பாபு மகன் சதீஷ் (26). இவா் திங்கள்கிழமை இரவு திண்டிவனத்திலிருந்து மேல்பாக்கத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். சாலை கிராமத்தில் உள்ள தனியாா் கோழிப்பண்ணை அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில் சதீஷ் மற்றும் எதிா் திசையில் பைக்கில் வந்த திண்டிவனம் வைரபுரம் காமராஜா் தெரு புது காலனியை சோ்ந்த காளி மகன் சிம்பு (21), வீரமுத்து மகன் கைலாஷ் (20), துளசிதாஸ் மகன் சுகுமாா் (17) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்களில் சிம்பு, சதீஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கைலாஷ், சுகுமாா் ஆகியோா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து குறித்து ரோஷணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.