முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் இன்று கல்விக் கடன் முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.12) நடைபெறுகிறது.

Updated On : 11 நவம்பர், 2024 at 8:01 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.12) நடைபெறுகிறது.

2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவா்கள் உயா் கல்வி பயிலும் வகையில், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கல்விக் கடன் முகாமை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கியாளா்களும், கல்வி நிறுவனங்களும் இணைந்தும் நடத்தும் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

செஞ்சி ஆலம்பூண்டியிலுள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →