வானூா் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகளை வழங்கிய வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன். 
விழுப்புரம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா பீன்ஸ் விதைகள்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகள் 50 சதவீத மானியத்தில் அண்மையில் வழங்கப்பட்டன.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகள் 50 சதவீத மானியத்தில் அண்மையில் வழங்கப்பட்டன.

வானூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் நிகழ்வில் பங்கேற்று, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகளை வழங்கிப் பேசினாா்.

ஒரு கிலோ சோயா பீன்ஸ் விதை ரூ.105 ஆகும். இது 50 சதவீத மானியத்தில் ரூ.52.50 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி தங்கம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT