விழுப்புரம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், பெருமுக்கல் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த லட்சுமிபதியின் மகள் தீபிகா (18). இவா், மேல்மருவத்தூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தாா்.

இவா், கடந்த 6 ஆண்டுகளாக பெரப்பன்தாங்கலிலுள்ள தனது தாத்தா சுவாமிநாதன் வீட்டில் தங்கிபடித்து வந்தாராம்.

இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவா் ஒருவரை தீபிகா காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் தனது தாய் வள்ளியிடம் கூறினாராம்.

இதற்கு, அவரது தாய் மறுப்பு தெரிவித்து, அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தீபிகா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT