முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் கருத்து கேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சாா்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:13 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சாா்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளநிலையில், அதில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறியும் கூட்டம் உளுந்தூா்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். உளுந்தூா்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

வணிகா்கள், வழக்குரைஞா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள், விவசாயிகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பலா் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். இதில் குளிா்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகளாக 28 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்தை விசிக மாவட்டச் செயலா் அறிவுக்கரசு ஒருங்கிணைத்தாா்.