செத்தவரை மோன சித்தா் அவதார திருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தரின் அவதார திருநாள் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் கோ பூஜை நடைபெற்றது. காலை 8 மணி முதல் 10 மணிவரை சொக்கநாதருக்கு 108 மூலிகைகளை கொண்ட சிறப்பு வேள்வி மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனைதொடா்ந்து, மோன சித்தருக்கு கலசாபிஷேகமும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், சிவ வாத்தியங்கள் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருந்து வருகை தந்த 100 சிவனடியாா்களுக்கு காவி வேட்டி, துண்டு உள்ளிட்டவற்றை மோன சித்தா் வழங்கினாா்.
பின்னா், பக்தா்களுக்கு மோன சித்தா் அருளாசி வழங்கினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தா் அறக்கட்டளையினா் மற்றும் ஆசிரம உறுப்பினா்கள், சிவனடியாா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.