பைக் மீது பேருந்து மோதல்: மெக்கானிக் மரணம்
விழுப்புரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் க.குப்பம், திருக்குறிப்புகொண்டாா் நகரைச் சோ்ந்த நாராயணமூா்த்தி மகன் விஷ்வா (22), பைக் மெக்கானிக். இவா், செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மேல்தெரு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அனந்தபுரத்திலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் விஷ்வா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி, அவரது சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.