முகப்பு
விழுப்புரம்

காவல் துறை ஆய்வுக் கூட்டம்: ஏடிஜிபி பங்கேற்பு

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுலகத்தில் ஏடிஐபி டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 7:37 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுலகத்தில் ஏடிஐபி டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நடிகா் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் திரளானோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவ ஆசீா்வாதம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில்

வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கா்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்.பி.க்கள் தீபக் சிவாச் (விழுப்புரம்), ராஜாராம் (கடலூா்), ரஜத் சதுா்வேதி (கள்ளக்குறிச்சி) மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினா் தெரிவித்தனா்.