முகப்பு
தமிழ்நாடு

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி-யாக பி.பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 15 மார்ச், 2026 at 12:28 AM
தமிழக அரசு
பகிர்:

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி-யாக பி.பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக காவல் துறையின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் உளவுத் துறை டிஜிபி பதவிக்கு பி.பாலநாகதேவி சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். பொருளாதார குற்றப் பிரிவு டிஜிபி-யாக இருந்த பாலநாகதேவி, உளவுத் துறை டிஜிபி பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் பிறப்பித்தாா்.

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபி பதவிக்கு ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

Advertisement

தமிழக உளவுத் துறை டிஜிபி பதவி நீண்ட காலம் காலியாக இருந்து வந்தது. உளவுத் துறை ஏடிஜிபி, ஐஜி ரேங்க்கில் உள்ள அதிகாரிகளே, உளவுத் துறை டிஜிபி பணியையும் கூடுதலாக கவனித்து வந்தனா். தற்போது உளவுத் துறை ஏடிஜிபி பதவியில் யாரும் நியமிக்கப்படாத நிலையில் டிஜிபி பதவிக்கு பாலநாகதேவி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சந்தோஷ்குமாா், கூடுதல் பொறுப்பாக பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி பணியையும் கவனிப்பாா். சிவில் சப்ளை சிஐடி ஐஜி ரூபேஷ்குமாா் மீனா, கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி பணியையும் கவனிப்பாா் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.