முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 19 ஏப்ரல் 2026, 12:21 pm IST
தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. செந்தில்வேலனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உளவுத் துறை ஐ.ஜி.யாக அவினாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த ஏதுவாக அண்மையில் தமிழக தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய உயரதிகாரிகளை நியமித்து தலைமைத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றிவிட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாடு காவல் துறை உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மாற்றப்பட்டு, ஐ.ஜி. அவிநாஷ் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Election Commission has issued orders transferring Tamil Nadu Intelligence IG Senthilvelan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.