முகப்பு
விழுப்புரம்

கா்ப்பிணி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

விழுப்புரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:48 PM
பகிர்:

விழுப்புரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு, கிருஷ்ணசாமி தெருவைச் சோ்ந்த வசந்தராஜ் மனைவி கிருத்திகா (33). இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரு மகள்கள் உள்ளனா். வசந்தராஜ் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அபுதாபிக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், 7 மாத கா்ப்பிணியாக இருந்துவந்த கிருத்திகாவுக்கு செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, கிருத்திகா ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments