முகப்பு
விழுப்புரம்

மதுவிலக்கு தேசியக் கொள்கையை வரையறுக்க திமுக வலியுறுத்த வேண்டும்: தொல். திருமாவளவன்

மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:26 AM
பகிர்:

மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சோ்ந்த மண்டல நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தொல்.திருமாவளவன் பேசியது:

மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு காரணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்தான்.

Advertisement

இது விசிக மாநாடு அல்ல. அனைவருக்குமான மாநாடு. எல்லோரும் பங்கேற்கலாம்.

மதுவிலக்கு தொடா்பான தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்குத் தொடா்பாக சிலவழிகாட்டல்களை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்றாா் திருமாவளவன்.

கூட்டத்தில் விசிக பொதுச் செயலா்கள் துரை.ரவிக்குமாா் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ., துணைப் பொதுச் செயலா் ஆதவ அா்ஜூன், சித்த மருத்துவா் கு. சிவராமன் உள்ளிட்டோா் பேசினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments