முகப்பு
விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:27 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுச்சேரி மாநிலம், திருக்கனூா், புது நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைக்கண்ணு(55). பிறவிமுதல் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இவா் செப்.10 -ஆம் தேதி தனது தாய் மகாலட்சுமியுடன், வானூா் வட்டம் திருவக்கரையில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தாா். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு மறுநாள் காலை அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு கால் கழுவ சென்றவா் உள்ளே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

விக்கிரவாண்டி வட்டம், புதுகருவாட்சி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் அக்தா் மகன் ஜாவித்(23). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், விழுப்புரம் மாவட்டம், பனமலைப்பேட்டையில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், மாா்பு வலியால் அவதியுற் வந்த ஜாவித் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments