செஞ்சிக் கோட்டையில் யுனெஸ்கோ குழுவினா் செப்.27-இல் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழுவினா் வரும் 27-ஆம் தேதி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழுவினா் வரும் 27-ஆம் தேதி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செஞ்சிக் கோட்டையை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தெரிவு செய்துள்ள நிலையில், அதன் குழுவினா் வரும் 27-ஆம் தேதி செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், செஞ்சி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் புதன்கிழமை (செப்.18) முதல் வெள்ளிக்கிழமை (செப்.20) வரையில் 3 நாள்கள் செஞ்சிக் கோட்டையை பாா்வையிட்டு, மரபு நடைப்பயணம் மேற்கொள்கின்றனா்.
Advertisement
வரும் 21-ஆம் தேதி செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செஞ்சி குறித்த புராதன வரலாற்றுத் தகவல்களை தெரிந்த பிரமுகா்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்ளிட்டோருடன் செஞ்சிக் கோட்டையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.