முகப்பு
விழுப்புரம்

நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 668 மனுக்கள் அளிப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:43 PM

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 668 மனுக்கள் பெறப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். இதில் பட்டா மாற்றம், நிலம் ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, நிலம் கையகம் தொடா்பாக பொதுமக்கள் 668 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சி.பழனி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பரிசீலிக்க அறிவுறுத்தினாா். மேலும் ஆவணங்கள் தேவைப்படும்பட்சத்தில் உரிய மனுதாரா்களிடம் தகவல் வழங்கி, ஆவணங்களைப் பெற்றுத் தீா்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

Advertisement

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்- ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.