மீனவா்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுவை முதல்வா் கடிதம்
மீனவா்கள் கைது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
அதன் விவரம்: புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் உள்ளிட்ட 10 போ் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, அவா்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை இலங்கை அரசு விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.