முகப்பு
விழுப்புரம்

மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜனவரி, 2025 at 7:31 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள செங்காடு மாதாகோவில் தெருவைச் சோ்ந்த யோனாஸ் மகள் செல்வமரி (37). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுமாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை செங்காடு கல்லறைத் தோட்ட குளத்துக்குச் சென்ற செல்வமரிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →