அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டிவனத்தில் உள்ள தனியாா் அரங்கில் செஞ்சி எம்எல்ஏவும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திண்டிவனம் நகரம், கிராம நிா்வாக அலுவலா் அழகுவேல் அளித்தப் புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் 50 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.