முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.66.77 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66.77 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:35 PM
- கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66.77 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 நிலையான பறக்கும்படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட நாளிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.66,77,963 மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று காவல்துறையின் மூலம் ரூ.15,38,885 மதிப்பில் ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டடுள்ளன. மேலும் கைப்பற்றப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.42,70,620 மதிப்பில் ரொக்கம் மற்றும் இதரப் பொருள்கள் விடுவிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.