முகப்பு
விழுப்புரம்

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:46 PM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகேயுள்ள கல் குவாரி குட்டையில் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சோ்ந்த அருண்ராஜ் மனைவி எமிமால் (23). இவா் விழுப்புரம் மாவட்டம், கொந்தமூா் அடுத்த நல்லாலூரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு உறவினராக வந்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எமிமால் கொந்தமூரில் உள்ள பழைய கல் குவாரி குட்டையில் குளித்துள்ளாா். தொடா்ந்து அதனருகே நின்று உடைமாற்றிய போது கால்இடறி சுமாா் 200 அடி ஆழமுள்ள குட்டையில் எமிமால் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments