நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது
விழுப்புரத்தில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான இருவரை போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம். நகை பட்டறை உரிமையாளரான இவா் மாா்ச் 3-ஆம் தேதி விழுப்புரம் பெருமாள் கோவில் வீதியில் தங்க நகைகளுடன் மொபெட்டில் சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த கும்பல் ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வசமிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கில் புதுச்சேரி, மணவெளி அன்னை இந்திரா நகா், தீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்த ஞா.சுரேந்தா்(22), முத்தியால்பேட்டை, கணேஷ் நகா், முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மு.கந்தசாமி (எ) அரிகிருஷ்ணன்( 28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித் பரிந்துரையின்படி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இருவரையும் குண்டா்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து , விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் சுரேந்தா், அரிகிருஷ்ணன் இருவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.