முகப்பு
விழுப்புரம்

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:21 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:37 PM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சூடான பால் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.நாகராஜ் (47), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் விறகு அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்துள்ளாா்.

அப்போது, நிலை தடுமாறியதில் நாகராஜ் உடல் மீது சூடான பால் கொட்டிவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.