முகப்பு
விழுப்புரம்

தலைமைக் காவலா் மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:23 AM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தலைமைக் காவலரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவா் மனைவி வசமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அடுத்துள்ள பனங்குப்பத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவா் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி கங்காதேவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கியுள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள், ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, கங்காதேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டனராம்.

Advertisement

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி, கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், இது குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா். தலைமைக் காவலரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் வளவனூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.