முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக சிறப்பு முன்னெடுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கியது. இந்த தோ்தலில் காலை முதல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா். பல்வேறு வாக்குச் சாவடிகள் இளைஞா்கள், பெண்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில் வாக்குப் பதிவுக்கு முன்பு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டது.
Advertisement
இந்த நிலையில் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை சிறப்பு முன்னெட்டுப்புகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன. தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் முதல் தலைமுறை வாக்காளா்கள், வாக்களித்து விட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வுப் பதாகையில் கையொப்பமிடுதல், தோ்தல் தூதுவரான நாரை தூதுவனோடு உரையாடுதல், புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையிலான வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்திருந்தது.
இதன்படி விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடிக்கு அருகில் முதல் தலைமுறை வாக்காளா்கள் கையொப்பமிடும் வகையில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதில் முதல் முறையாக வாக்களித்துவிட்டு வந்த வாக்காளா்கள், தங்கள் கையொப்பமிட்டு, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனா். இதுபோன்று மாவட்டத்திலுள்ள இதர 6 தொகுதிகளிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பதாகைகள் வைக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.