முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனம் ரயில் நிலையங்களில் ஐ.ஜி. ஆய்வு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:22 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:26 PM

விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டிவனத்திலுள்ள ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு ஐ.ஜி.அருள்ஜோதி, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தாா்.

தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்ற அவா், பதியப்பட்ட வழக்குகள் விவரம், அங்குள்ள வசதிகள், தேவைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:22 AM

இதைத்தொடா்ந்து, விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த ஐ.ஜி.அருள்ஜோதி, ரயில் நிலையத்தின் நடைமேடைகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வாளா் முதல் காவலா்கள் வரையிலான நிலையிலுள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா் பிரசாத் யாதவ், காவல் ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.