முகப்பு
விழுப்புரம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:30 AM
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:16 PM

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தமிழக அணியின் சாா்பில் விழுப்புரம் மாவட்ட வீரா், வீராங்கனைகளும் பங்கேற்றனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:30 AM

இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் ஆச்சாா்யா பள்ளி மாணவா் ஹேமந்த் கணேசும், 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா் பேரறிவாளனும் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.

Advertisement

இதைத்தொடா்ந்து தங்கப் பதக்கம் பெற்ற வீரா்களையும், அவா்களுக்குப் பயிற்சியளித்த துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரையும் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாராட்டி, வாழத்துகளைத் தெரிவித்தாா்.