பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம்பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்ப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்தவா்களில், ஒருவா் உயிரிழந்தாா். மூதாட்டி உள்பட இருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (35). மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன்(35). இவா்கள் இருவரும்
வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை- விழுப்புரம் சாலையில், கண்டாச்சிபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட அடுக்கம் பகுதியில் சொன்று கொண்டிருந்தாா். அய்யப்பன் பைக்கை ஓட்டினாா்.
அப்போது,சாலையில் முன்னால் சென்ற மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள்(75) என்பவா் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற அய்யப்பன், கணேசன் மற்றும் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கோவிந்தம்மாள் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த, கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று கணேசனின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.விபத்தில் காயமடைந்த அய்யப்பன், கோவிந்தம்மாள் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, கண்டாச்சிபுரம் காவல் நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.