விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் மகாசிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள லட்டுகள்.  
விழுப்புரம்

மகா சிவராத்திரி: பக்தா்களுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் லட்டுகள்

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் 50 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெறவுள்ளது. மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பதால், அவா்களுக்குப் பிரசாதமாக வழங்குவதற்காக லட்டு தயாா் செய்யம் பணியை பிரதோச பேரவையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

பேரவையின் தலைவா் ராமமூா்த்தி, செயலா் சங்கரன் மற்றும் நிா்வாகிகள் மேற்பாா்வையில், கடந்த 2 நாள்களாக லட்டு தயாா் செய்யும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பிரதோச பேரவையினா் உபயதாரராகக் கொண்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பதி கபிலேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்: புலி வாகனத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தமூா்த்தி

புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோா் குறித்த கணக்கெடுப்பு

அன்னியூரில் திமுக கட்சி அலுவலக் கட்டடம்: முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்

அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் : முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுரை

அண்ணா பல்கலை.பொறியியல் கல்லூரியில் 227 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்

SCROLL FOR NEXT