முகப்பு
விழுப்புரம்

அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:40 AM
திண்டிவனத்தை அடுத்துள்ள ஒலக்கூரில் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:11 PM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், ஓலக்கூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:40 AM

இதையடுத்து ஒலக்கூா் கிராம மக்கள் சனிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுப் பேருந்தை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.