முகப்பு
விழுப்புரம்

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:35 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:41 PM

விழுப்புரம், பிப்.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம்,அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே.சாமிக்கண்ணு (75). இவா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா்ப் பகுதியிலுள்ள சாரதா ஆசிரம கண் மருத்துவமனையில் கண்பரிசோதனைக்காக சனிக்கிழமை வந்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:35 AM

மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னா் சாமிக்கண்ணு சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணுவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சாமிக்கண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.