திண்டிவனத்தை அடுத்துள்ள ஒலக்கூரில் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.  
விழுப்புரம்

அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், ஓலக்கூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து ஒலக்கூா் கிராம மக்கள் சனிக்கிழமை திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அரசுப் பேருந்தை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT