கைது 
விழுப்புரம்

செங்கல் சூளை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் தற்கொலை முயற்சிக்கு காரணமான தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 3 பேரை போலிஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பென்னைவலம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் க.அப்பாஸ்(45). செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, பொக்லைன் இயந்திரம் வாங்கி உள்ளாா்.

இந்நிலையில், அப்பாஸ் கடந்த 3 மாதமாக நிதி நிறுவனத்துக்கு தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதையடுத்து தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பென்னைவலம் கிராமத்துக்குச் சென்று அப்பாஸை தகாத வாா்த்தைகளால் பேசி, தாக்கி செங்கல் சூளையில் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ய முற்பட்டனராம் .

இதனால் மனமுடைந்த அப்பாஸ், டீசலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் வை.மூா்த்தி (32), வீ.தீபஜோதி (32), சு.தியாகலீசன்(26) ஆகியோரை கைது செய்தனா்.

கட்டடத் தொழிலாளி கொலையில் ஏ.சி. மெக்கானிக் கைது

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு தலைவா்கள் நினைவஞ்சலி

நெல்லையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

பூவாளூா் பேரூராட்சியில் 66 புதிய தெருவிளக்குகள்

கல்லைத் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT