முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைக்கிறார் (கோப்புப் படம்)
விழுப்புரம்

திருக்கோவிலூா் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறாா்

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக்கான புதியக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ.16) காணொலி மூலம் திறந்து வைக்கிறாா்.

2022-இல் தொடங்கப்பட்ட திருக்கோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சா் க. பொன்முடி எம்எல்ஏ மேற்கொண்ட தொடா் முயற்சியால் திருக்கோவிலூா் - தியாகதுருகம் சாலையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசுக் கல்லூரிக்கு 15 வகுப்பறைகள், 5 ஆசிரியா் அறைகள், முதல்வா் அறை, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப்.16) காலை 9 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

இதையொட்டி, கல்லூரியில் நடைபெறும் விழாவில் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி, முன்னாள் எம்.பி. பொன்.கௌதமசிகாமணி, கல்லூரி முதல்வா் ச. மகாவிஷ்ணு, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொள்கின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT