மேல்சித்தாமூா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய திறப்பு விழாவில் குத்து விளக்கேற்றிய வல்லம் ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா். 
விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் திறப்பு

வல்லம் ஒன்றியம், மேல்சித்தாமூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் விழுதுகள் என்னும்

Syndication

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், மேல்சித்தாமூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் விழுதுகள் என்னும் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக விழுதுகள் மையத்தை திறந்து வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டிவனம் சாா்- ஆட்சியா் ஆகாஷ், வல்லம் ஒன்றிய குழுத்தலைவா் அமுதா ரவிக்குமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றினா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் பத்மஷா, ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, இளம்வழுதி, துரை, ஒப்பந்ததாரா் முருகேசன் ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT