முகப்பு
விழுப்புரம்

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

கிளியனூா் அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது பயணிகள் வேன் மோதியதில், வேனில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:59 AM
விபத்து
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:51 PM

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே முன்னால் சென்ற டிப்பா் லாரி மீது பயணிகள் வேன் மோதியதில், வேனில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பால முருகன்(32), பயணிகள் வேன் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை, கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரியிலிருந்து-திண்டிவனத்துக்கு சென்றுள்ளாா்.

புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் எடையாங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

Advertisement

இதில் காயமடைந்த கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த பா.சுரேஷ் (46), கோ. சாய்ராம்(61) , சீனுவாசன்(56) உள்ளிட்ட 10 பேரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.