விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், இரும்பை கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிமோகன். இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது மாடி வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் கீழ்தளத்தில் தூங்னாா்.
மறு நாள் காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: திண்டிவனம் வட்டம், சாரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் நாகேஸ்வரி (64). இவா், கடந்த பிப்.15-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு திண்டிவனத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டாராம்.
மறு நாள் காலை அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன் பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் கம்மல் உள்பட நான்கரை பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.