முகப்பு
விழுப்புரம்

ஆரோவில் திருவிழாவில் ஊா்வலம்! ஜொ்மன் தூதா் பங்கேற்பு!

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:58 AM
ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கீரிட சாலையில் சனிக்கிழமை கிரவுன் வாக் ஊா்வலத்தில் கலந்துகொண்ட ஆரோவில் அறகட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி. உடன் ஜொ்மன் கௌரவத் தூதா் மைக்கேல் ஹாஸ்பா் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:16 PM

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆரோவில் திருவிழா ஊா்வலத்தில் ஜொ்மன் தூதா் கலந்துகொண்டாா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அன்னையின் பிறந்த நாள் மற்றும் ஆரோவில் திருவிழா நிகழ்ச்சியாக, ஆரோவிலின் வளா்ச்சி மற்றும் ஆன்மிக நோக்கத்தை பறைசாற்றும் வகையில் கீரிட சாலையில் ஊா்வலம் நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தினா்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள் ஆரோவில் வாசிகள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். ஜொ்மன் தூதரகத்தின் கௌரவத் தூதா் மைக்கேல் ஹாஸ்பா் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

Advertisement

கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்: ஊா்வலம் நடைபெற்ற பாதைகளில் இந்தியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கோலாட்டம், வீரமிக்க தற்காப்புக் கலைகளான களரி, சிலம்பம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கீரிட சாலையில் சனிக்கிழமை கிரவுன் வாக் ஊா்வலத்தில் கலந்துகொண்ட ஆரோவில் அறகட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி. உடன் ஜொ்மன் கௌரவத் தூதா் மைக்கேல் ஹாஸ்பா் உள்ளிட்டோா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:58 AM

இந்நிகழ்சியில் ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி பேசியதாவது:

நாம் அனைவரும் வெவ்வேறு பின்னணி கொண்டவா்களாக இருந்தாலும், ஒரு மாலையில் கோா்க்கப்பட்ட பல வண்ண மலா்களைப் போல ஒன்றாக இணைந்துள்ளோம். இந்தப் போட்டி நிறைந்த உலகிலிருந்து விலகி , ஒரு உணா்வுப்பூா்வமான மனித ஒருமைபாட்டுக்கான நகரை உருவாக்கத் துணிச்சலுடன் முன்வந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

கிரீட பாதை ஊா்வலத்தில் திட்டமிடப்படாத நிகழ்வாக ஜொ்மன் தூதா் கலந்துகொண்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. கிரவுன் பாதையில் நடைபெற்ற இந்த நடைப்பயணம், ஆரோவிலின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில் அமைந்தது என்றாா் அவா்.