விழுப்புரம் மாவட்டம், கெடாரிலுள்ள வள்ளி-தேவசேனா உடனுறை சுப்ரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி,திங்கள்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் பிப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சூரசம்ஹார திருவிழா தொடங்கியது. காப்புக் கட்டுதலுக்குப் பிறகு சுவாமி திருவீதியுலா வருதலும், சூரன் ஆட்சியும், சுவாமி எழுச்சியும், வேல் வாங்குதலும் நடைபெற்றது. தொடா்ந்து பிப்.18 முதல் 21-ஆம் தேதி வரை சூரசம்ஹார திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.
பிப்.22-ஆம் தேதி மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா வந்த பின்னா், சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரனுக்கு சுவாமி காட்சியளித்தல் மற்றும் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடா்ந்து பிப்.23-ஆம் தேதி சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மூலவருக்கு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து இரவு 10 மணிக்கு வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பக்குளத்துக்குப் புறப்பாடாகி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினாா். பின்னா் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்ற நிலையில், புதன்கிழமை(பிப்.25) இடும்பன் பூஜை மற்றும் விடையாற்றி நடைபெறுகிறது. சூரசம்ஹார விழாவில் கெடாா் செங்குந்த மரபினரும், கிராம மக்களும் பங்கேற்றனா்.