பொங்கல் தொகுப்பு வாங்கிச்செல்லும் மக்கள் 
விழுப்புரம்

விழுப்புரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் தொடக்கம்!

விழுப்புரத்தில் பொங்கல் தொகுப்பு தொடங்கியது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் 6,28,774 ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 629 இலங்கைத் தமிழர் அகதிகள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரொக்கம் ரூ. 3,000 ஆகியவை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம், முகையூரில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன், கெளதம சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் நகரம் வி. மருதூரில் நடைபெற்ற நிகழ்வில் விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The distribution of Pongal gift packages began on Thursday in Villupuram district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடைநிலை ஆசிரியா்கள் பேரணி

நூறு வேலை சட்டத்தைக் காக்க நாளை உண்ணாவிரதம்

சாலையைக் கடந்தவா் வாகனம் மோதி பலி

அரையிறுதியில் பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் ஏமாற்றம்

பேருந்தில் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT