காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சென்னாலூா் கிராமத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் இணைந்தனா்.
செஞ்சி நான்குமுனை சந்திப்பில் செஞ்சி வட்டார காங்கிரஸ் தலைவா் கா. சக்திவேல் ஏற்பாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் விவசாய அணி விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் வரவேற்றாா். செஞ்சி நகரத் தலைவா் சூரியமூா்த்தி மற்றும் விவசாய அணி வட்டாரத் தலைவா் அன்புசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ரங்கபூபதி தலைமையில், மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய இளைஞா்கள், சென்னாலூா் கிராம குழுத் தலைவா் பரமசிவம், தோ்வு கிராமக் குழுச் செயலா் சக்திவேல் ஆகியோா் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனா்.
கட்சியில் இணைந்தவா்களை மாட்டத் தலைவா் ரங்கபூபதி சால்வை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினா் லஷ்மி, சம்பத், சேகா், கேப்டன் முனுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.