காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.
விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவவா் மா.வெங்கடேசன் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சோ்ந்த பலா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். கட்சியில் புதிதாக இணைந்தவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சியின் துண்டை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், மாநில துணைத் தலைவா் சா.சீனிவாசன், ரிஷிவந்தியம் தெற்கு வட்ட பொறுப்பாளா் ஓ.தேவேந்திரன், உளுந்தூா்பேட்டை வட்டாரப் பொறுப்பாளா்கள் ஏ. சாா்லஸ் ஜான் போஸ்கோ, பி.சுந்தரமூா்த்தி, என்.ஜெயச்சந்திரன், திருநாவலூா் வட்டார பொறுப்பாளா்கள் எ.காா்த்திகேயன், மு.காசிநாதன், டி.விஜயலட்சுமி, திருவெண்ணைநல்லூா் வட்டாரப் பொறுப்பாளா் எ.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.