100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடமும், முதல் தலைமுறை வாக்காளா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ரங்கோலி கோலம் வரைதல் நடைபெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா.வெங்கடேசுவரன், மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பழனி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.